Monday, September 14, 2015

காதலாய்... கசிந்துருகி ... - 2

குறுகுறு பார்வை…துறுதுறு கண்கள்…எனக்கு நேர் பக்கத்து Bench-இல் தான் அவள் அமர்ந்து இருக்கிறாள்…அப்போது எதுவும் தெரியவில்லை.. இவள்தான் என் வாழ்க்கையை மாற்றி அமைக்க போகிறாள் என்று… முதல் இரண்டு வருடங்களில் எதுவும் தெரியவில்லை…பார்த்ததும் இல்லை..தோன்றியதும் இல்லை…பேசியதும் இல்லை… எப்படி முளைத்திருக்கும் என்னுள் அவளை பற்றிய நினைவுகள்…தெரியவில்லை..தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை… அவளை மொளனமாக பார்த்து கடந்து செல்வதிலேயே கவனமாக இருந்தது காலம்..!!!
எனக்கு பெண்களை கண்டால் பிடிக்காது..வெளியில் காட்டிக்கொண்டதும் இல்லை… இயல்பாகவே நான் ஒரு சாது..எதை பற்றியும் கவலை கிடையாது.எதுவும் எனக்கென்று கிடையாது என்ற கருத்தையே காதலாய் பற்றிக்கொண்டு இருப்பவன்.
எனக்கு ஒரு நண்பன் சுகன்….சுகன் பெயரில் மட்டுமல்ல…நிஜத்திலும் என் சுகம்,சோகங்களிலும் பங்கு கொள்பவன்.என் உலகினில் நானும் அவனும் தான் நிஜம்..மற்ற அனைத்தும் கற்பனையே…!!!!
சிறுவயது முதலே…எனக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காத ஒரு காரணமோ…வளர்ந்த காலங்களில் நான் எதிர்பார்த்த அரவணைப்பை… ஒரு கதகதப்பை ஏற்படுத்த முடியாத…தெரியாத…பெண்களையே தேடித்தேடி.... துவண்டு போன ஏமாற்றங்களோ…தான் என்னுள்..இந்த பெண்களை வெறுக்க செய்யும் வலுவான காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.
தாய்மடி கற்பனை..தாய்மடி கனவு..தாயின் அன்பு காணவே முடியாத காணல்..!!!எல்லாம் சேர்ந்து என்னை காலம் என்ற குழியில் போட்டு மூடியது..
முகமுடியுடன் தான் அலைகிறேன்.பசுத்தோள் போர்த்திய புலியாக… சிரித்து பேசி..உள்ளே மரித்து போகும் கடவுள்…தெறித்து சிலிர்க்கும் மிருகம்.. இருந்தும் இயலாத…வெளிப்படுத்த தெரியாத ஒரு கண்ணிவெடி என் வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னமாகி போவது அறியாமல்..   புத்தம் புது ஒற்றை ரோஜாவாய் செடியில் பூத்த அவள்…
ரோஜா பூக்களே இல்லாத ஒரு ஊரில் ஒருவன் வீட்டு தோட்டத்தில் …உள்ள ஒற்றைச்செடியில் ஒரு பூ பூத்தால்..எவ்வளவு ஆனந்தம் தோட்டக்காரனுக்கு…சொல்லவே வேண்டாம்…கூத்தாடுவான்.
அதைப்போலத்தான்…இந்த கண்ணிவெடியின் கள்வெறியால் .. காலங்களில்…காதல்களில்…துயரங்களில்..துக்கங்களில்..தூக்கங்களில்…ஏக்கங்களில்…தடம் பதிக்கப்போகும் அந்தஒற்றை ரோஜாப்பூ….!!! நினைத்தாலே சிலிர்க்கிறது…
பூவிற்கு பெயருண்டோ…??? அஞ்சலி…!!!HOD is Calling you….!!! ஒர் குரல்..அப்போதுதான் தெரிந்தது உன் பெயருக்கும் தனி அழகு உண்டு என்று….அஞ்சலி…!!!
திடுக்கென்று எழுந்தாள் அவள்.தும்பைப்பூ சுடிதார்..நிறத்தைப்போலவே அழகும்.என்னை எரிக்கின்ற அழகு…என் மிருகத்தை குலைக்கின்ற அழகு.என் தனிமை வெறிகளை தகர்கின்ற அழகு,தாண்டவமாடும் அழகு.வகுப்பறையை விட்டு வெளியே வேகமாய் வந்தாள்.
சும்மாவே தாங்க முடியாது..இதுல.. என் ஆளு தனியா வேகமா போகுதே..முடியுமா?? காற்றாய் பின்தொடர்ந்தேன்..ஒற்றை ரோஜா செடியை பத்திரமாய் காக்கும் காவல்காரனாய்,அவள் அழகை ரசித்தபடி..சிரித்தபடி..!!!
யாராவது என்னை பார்த்தால் பைத்தியக்காரன் என்றே சொல்லக்கூடும்.பரவாயில்லை..உனக்காகத்தானே……..!!!!!!!!!
என்ன அவள் எங்கே??கனவில் இருந்த நான்..நனவை விட்டு விட்டேன்..
ஹய்யோ.. staff room… உள்ளே போயிருப்பாளோ.. நான் உள்ளே போகலாமா? என்ன செய்வது..?..முழித்துகொண்டே கதவை திறக்க எத்தனிக்கிறேன்..திறந்ததும் எதிரினில் அவள்.. சற்றும் எதிர்பார்த்ததில்லை.. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உன்னை காண்பேன் என்று…
பிரமை பித்து என்பார்கள்.கேள்விபட்டு இருக்கிறேன்.இப்போது தான் உணர்கிறேன்.என்னை என் கண்களுக்குள் அழகாய் அவள் பார்க்கின்ற நொடிகள்..ஆயிரம் ஆயிரம் கவிதைகள்…!!!வர்ணிக்க முடியாதது,விவரிக்க முடியாதது…கடவுள் போல்…!!!
அந்த குறுகுறு கண்கள்..ஒரு நொடி தான்..கண்டு கொண்டாள்..நான் வளர்க்கும் காதலை…தெரிந்து விட்டது அவளுக்கு… புரிந்து விட்டது எனக்கும்,, வியர்த்து கொட்டியது..படபடத்தது காற்று..மரம்…செடி கொடி.. உயிரற்றது எல்லாம் உயிருடன் உலவுவது போலவும்…
உயிருள்ள எல்லாம் பொம்மைகளாகி உறைந்தது போலவும்… ப்ப்ப்பா…!!!!
அந்த கண்கள்..என்னை முற்றிலும் அடிமையாக்குகிறதே….!!!!
சாசனம் இன்றி…சத்தம் இன்றி..சங்கடம் இன்றி…இதோ இந்த பெண்ணின் கண்கள் ..என்னை மேலும் அழகாக்குகிறதே…!!!

சிரித்துவிட்டு சென்று விட்டாள்.. தொலைத்து விட்டு அதே இடத்திலேயே சிலையாக நின்று கொண்டிருந்தேன் நான்!!!!!

Monday, September 7, 2015

காதலாய்... கசிந்துருகி ... - 1

மழை ஓய்ந்து இருக்கிறது என்று தோன்றுகிறது.இந்த மழை சலிப்பதே இல்லை. முதல் காதல் போல.நினைக்க நினைக்க நனைந்திடும் சுகம் தரும்.திடிரென அழைப்பு மணி ஒலித்தது.என்னடா பண்றே? என் நண்பி தான்.கொஞ்சம் தனியா வாயேன்..உன் கிட்ட பேசனும்.. எதுவும் சொல்லாமல் laptop lock பண்ணிவிட்டு வெளியே வந்தேன்.சாரல் அடித்தது.டேய் அவ ஊரில் இருந்து India வராடா…
மனதில் இருட்டு,மின்னல்…மழை வரும் போல் இருந்தது…வேகமாக துடிக்க ஆரம்பித்தது இதயம்…மனதினுள் மழைக்காலம்.. டேய்ய்ய்…. என்னடா ?
மீண்டும் அதே கேள்வி…விடைதேடும் அவசரம்…தவிப்பை காட்டிக்கொள்ளவில்லை.முடியவும் முடியாது.ஓ ஹோ… உன் கிட்ட சொல்லிட்டாங்களோ எஜமானி .. அதான் என் கிட்ட சொல்றியோ…? என்றேன்.
நீ திருந்தவே மாட்டடா..போ…போய் வெள்ளைக்காரன் கொடுக்கிற மாடுகளை போய் பார்த்துட்டே இரு…அதானே உன் வாழ்க்கை..போ…என்று திட்டி விட்டு வைத்து விட்டாள்.
எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பி அவள்…அவள் பாடு இன்னும் சிரமம்தான்…அறிவுக்கு புரிகிறது…இருந்தாலும் பாழாய்போன மனசுதான் ஜெயிக்கிறது.12 வருட பரிதவிப்பு…ஒருநாளில் அதை கொட்ட இயலாது. வழியில் கடந்து சென்ற என் Team Member ஏய் சூர்யா,சுனாமி வார்னிங் வந்து இருக்கு..அதனால்..மானேஜர் வீட்டுல இருந்து வேலை பார்க்க போறாராம்..சொல்லிவிட்டு சென்றது ஒரு மின்னல்…!!!
எது எப்படியாக இருந்தாலும் இந்த பெண்களை மட்டும் என்னால் வெறுக்க முடியவில்லை… ஒவ்வொரு பிம்பத்திலும் உன்னை காண்பதிலா..இல்லை..என்னை தவிக்க விட்டுசென்ற உன்னை தேடித்தேடி அலைவதில் உள்ள ஏக்கமா? எதுவென்று தெரியவில்லை…
கடைசியாக உன் தந்தையுடன் உன்னை பார்த்தது.அவர் பார்த்த பார்வையில் அவ்வளவு வெறுப்பு…காலம் முழுவதும் நான் சுமக்கும் அந்த வெறுப்பு…
வார்த்தைகளுக்குள் மாட்டிக்கொண்டு எங்களுக்கு நடுவில் நீ…. என் வாழ்க்கையை விட்டு விலகிய தருணம்… நெருஞ்சி முள்ளாய்….தைக்கிறது..
நினைக்கவே பயமாய் இருந்தது.ஒரு Cigarette எடுத்து பற்றவைத்து கொண்டேன்… நெருப்பாய்….புகையாய்…நீ தான்… நீ மட்டும் தான்…!!!!!சாரல் மழை தூறல் போட்டு….இப்போது பலத்தமழையாகவே படுகிறது..!!!மழை…மழை…மனதினுள் மழை…வெளியே எங்கும் மழை…!!!   எனக்கு மழையென்றால் நீ…. நீயென்றால் மழை…!!!!ஒரு மழைக்கால காலையில் தான்…என் உலகில் நீ முழுவதுமாய் மூழ்கிப்போனாய்…ஒரு மழைக்கால மாலையில் தான்…என்னுள் முழுவதுமாய் உன்னை தொலைத்தேன்…ஒரு மழைக்கால மதியத்தில் தான்…உன் கைகளைப்பற்றி பிடித்துக்கொண்டேன்…அந்த விரல்களை சேர்த்து வைத்த குடையை கூட இன்றுவரை பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன்… நன்றிக்கடன்…!!!ஒரு மழைக்கால இரவினில் தான்..கொஞ்சும் நிலா சாட்சியாக… உன்னை கண்களால் பார்த்து… கவிதையாய்…  பற்றிக்கொண்டு…காதலாய் கசிந்துருகி….இதழ் பதித்த தருணங்களிலும் சிரித்து சந்தோஷமாய் துள்ளிக்குதித்து முத்தமிட்ட இதே மழை….!!!!
நிகழ்வுகள் தான் வேறு…இயற்கையோ ஒன்றுதான்…!!!அதுபோல்… என் வாழ்க்கை பயணங்கள் என்பது வேறுவேறு என்றாலும்..என்னுள் உறைந்த இயற்கையாகவே…எப்போதும்…எங்கும் நீ தான் வாழ்கிறாய்…!!! Cigarette கையை சுட்டது…அணைத்துவிட்டு வானத்தை பார்த்தேன்….. இப்போது அழுதுக்கொண்டிருக்கிறது….!!!!

Thursday, November 17, 2011

குளிரும்....,,!! இருட்டும்....,,!!

எண்ணிலடங்கா நினைவுகளில் _ எது
உன்னுடையதாக இருக்ககக்கூடும்
என்று தேடும் பொழுதுகளில் எல்லாம்
என் தோழனாகவே _ கூட
வலம் வருகின்றது இந்த
குளிரும் ....இருட்டும் .....!!!!!
இரண்டுக்கும் காலமும் இல்லை !!!!
குறிப்பிட்ட நேரமும் இல்லை !!!
அண்ட வெளியில்
ஆயிரம் கோடி உயிர்களுடன் இருந்தாலும்
என்னுள் ஒளிந்து கலந்து கொள்ளும் _ தன்னிகரில்லா
தனிமை போலவே
வாழும் பொழுதுகளில் வலம் வந்து கொண்டிருகின்றது _ இந்த
குளிரும்..... இருட்டும்.....!!!!!
இங்கு உறவுகள் கிடையாது ....,
களவுகள் தெரியாது....,
காவல்கள் புரியாது .....!!!!!
அடர்ந்த காட்டில் படரும் கொடிகள்
போலவே _ என் தனிமை தாண்டவத்தில்
பிணைந்து கொள்கின்றன இந்த
குளிரும்.... இருட்டும்....
எங்கும் எதிலும் நிலைத்து கொள்ளும்
காற்றினை போல _ என் தனிமைகளின்
தேடல்களை பின்தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கின்றன எப்போதும் _ இந்த
குளிரும் .... இருட்டும்...!!!!!!!

Thursday, January 6, 2011

உலகம் - ஜெயந்தன் பார்வையில்

உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"
-ஜெயந்தன்
நன்றி லேகா !!!

Friday, September 11, 2009

வெறுமை

வெளிச்ச‌த்தை விர‌ட்டும்
இருள் எங்கும் சூழ்ந்த‌
கான‌ல்வ‌ழி சாலையில் _ என் வாழ்க்கைச்ச‌க்க‌ர‌ம் ம‌ட்டும்
எப்ப‌டியோ வேக‌மாக
சுழன்று கொண்டுதான் இருக்கிற‌து!!!
த‌ண்ட‌வாள‌ம் இல்லாத‌ ர‌யில்...!!!
கட்டுபாடுக‌ள‌ற்ற‌ ம‌ன‌ம்...!!!
எங்கும் எதிலும் யாவ‌ரும் _ இதுவ‌ரை
வெறும் பிம்ப‌ங்க‌ளாக‌வே ப‌ய‌ணிக்கின்ற‌ன‌ர்!!!
இத்த‌னை வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்திருப்பினும்_இன்னும்
என்னால் க‌ண்டுகொள்ள‌ முடிய‌வில்லை
என‌க்கே என‌க்கான ஒரு ச‌க‌ ம‌னித‌னை!!!!
ஒரு வேளை...... அவ‌ன்....
உங்க‌ளில் ஒருவ‌னாக‌
கூட‌ ஒளிந்திருக்க‌லாம்..!!!
விடை சொல்லுமா கால‌ம்???


Monday, July 27, 2009

என் இற‌ப்புக்கு முன் !!!

வெளியே தெரியாத வேர்களைப் போல்
சுற்றி கொண்டிருக்கும் எண்ணங்கள்...
கவனங்களில் சிதறி தெறித்து _
என் எதிரே தீ பிழம்புகளாய்
துவண்டு விழுந்த‌ வ‌ண்ண‌ம் இருக்கின்ற‌ன‌...
இறுதியாக‌ என் மூச்சுக‌ள் நிற்கும் முன்பு,
எதையோ எங்கேயோ யாரிட‌மோ
சொல்லிவிட‌ வேண்டும் என்று துடிக்கிற‌து இத‌யம்...
அய்யோ..என் செய்வேன்..
அட‌ங்க‌ துடிக்கும் துடிப்புக்கு வேக‌ம் அதிக‌ம்..
அதையும் மீறி சொல்லிவிட‌ நினைக்கும் ம‌ன‌து..
இர‌ண்டும் போட்டி போட்டுக்கொண்டு..
இதோ என் எதிரில் ச‌ம்ம‌ண‌மிட்டு எக‌த்தாள‌ம் போடுகின்ற‌ன‌...!!!
அத‌ற்கு பின்னால் க‌ருகிய‌ க‌ன‌வுக‌ளும் ..
க‌லைந்து போன‌ க‌ற்ப‌னைக‌ளும் ..
அடிக்கிற காற்றில் கிழிகின்ற‌ ப‌ட்ட‌மாய் _ தாங்கி
நிற்கிற‌து கால‌ம் என்கிற‌ நூல்!!!!
எப்போது அறுந்து விழ‌ப்போகிற‌தோ
ஆவ‌லுட‌ன் பார்க்கும் இத‌ய‌மும்
அதை ஆவேச‌மாய் அட‌க்க முய‌லும் ம‌ன‌மும்...
கால‌ம்
இதோ..இப்போதே...
முடிய‌ போகிற‌தோ....
க‌டைசி வ‌ரை
இவ‌ற்றை நினைத்து நினைத்தே
சொல்ல‌ வ‌ந்த‌தையும் எவ‌ரிட‌மும் இய‌ம்பாம‌ல்...
மெள‌ன‌மாய் என‌க்குள் மெல்ல‌ சூழ்ந்த‌து _சாவு என்னும் இருட்டு....!!!!


Wednesday, March 18, 2009

ரகசியங்கள் - I


என்னுள்ளே எனக்காய் சில மாற்றங்கள்...
மழை வருவதற்க்கு முன்
முளைக்கின்ற‌ இருண்ட மேகங்கள் போல...!!!!
உன் காதல் உணர்வதற்க்கு முன்னரே
சில அதிர்வுகள்......
நினைக்கும் போதெல்லாம்
ஸ்பரிசிக்கும் உணர்வுகள்...
உலகினை சுற்றும் கோள்களை விட‌
வேகமாய் சுழலுகிறது என்னுள்
உந்தன் நினைவுகள்...!!!
நினைவுகளில் எல்லாம் நீயா? இல்லை
நீ மட்டுமே என் நினைவுக‌ளா?
எதுவாக‌ இருப்பினும்
இந்த‌ காத‌ல் வ‌ந்து சேரும் பொழுதினை விட‌
வ‌ரும் முன் நிக‌ழும் க‌ண‌ங்க‌ள்
எல்லாமே மிக‌வும்
எதிர்பார்ப்புக்குள்ளாகின்ற‌ன‌..!!!