Thursday, November 17, 2011

குளிரும்....,,!! இருட்டும்....,,!!

எண்ணிலடங்கா நினைவுகளில் _ எது
உன்னுடையதாக இருக்ககக்கூடும்
என்று தேடும் பொழுதுகளில் எல்லாம்
என் தோழனாகவே _ கூட
வலம் வருகின்றது இந்த
குளிரும் ....இருட்டும் .....!!!!!
இரண்டுக்கும் காலமும் இல்லை !!!!
குறிப்பிட்ட நேரமும் இல்லை !!!
அண்ட வெளியில்
ஆயிரம் கோடி உயிர்களுடன் இருந்தாலும்
என்னுள் ஒளிந்து கலந்து கொள்ளும் _ தன்னிகரில்லா
தனிமை போலவே
வாழும் பொழுதுகளில் வலம் வந்து கொண்டிருகின்றது _ இந்த
குளிரும்..... இருட்டும்.....!!!!!
இங்கு உறவுகள் கிடையாது ....,
களவுகள் தெரியாது....,
காவல்கள் புரியாது .....!!!!!
அடர்ந்த காட்டில் படரும் கொடிகள்
போலவே _ என் தனிமை தாண்டவத்தில்
பிணைந்து கொள்கின்றன இந்த
குளிரும்.... இருட்டும்....
எங்கும் எதிலும் நிலைத்து கொள்ளும்
காற்றினை போல _ என் தனிமைகளின்
தேடல்களை பின்தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கின்றன எப்போதும் _ இந்த
குளிரும் .... இருட்டும்...!!!!!!!