Monday, September 14, 2015

காதலாய்... கசிந்துருகி ... - 2

குறுகுறு பார்வை…துறுதுறு கண்கள்…எனக்கு நேர் பக்கத்து Bench-இல் தான் அவள் அமர்ந்து இருக்கிறாள்…அப்போது எதுவும் தெரியவில்லை.. இவள்தான் என் வாழ்க்கையை மாற்றி அமைக்க போகிறாள் என்று… முதல் இரண்டு வருடங்களில் எதுவும் தெரியவில்லை…பார்த்ததும் இல்லை..தோன்றியதும் இல்லை…பேசியதும் இல்லை… எப்படி முளைத்திருக்கும் என்னுள் அவளை பற்றிய நினைவுகள்…தெரியவில்லை..தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை… அவளை மொளனமாக பார்த்து கடந்து செல்வதிலேயே கவனமாக இருந்தது காலம்..!!!
எனக்கு பெண்களை கண்டால் பிடிக்காது..வெளியில் காட்டிக்கொண்டதும் இல்லை… இயல்பாகவே நான் ஒரு சாது..எதை பற்றியும் கவலை கிடையாது.எதுவும் எனக்கென்று கிடையாது என்ற கருத்தையே காதலாய் பற்றிக்கொண்டு இருப்பவன்.
எனக்கு ஒரு நண்பன் சுகன்….சுகன் பெயரில் மட்டுமல்ல…நிஜத்திலும் என் சுகம்,சோகங்களிலும் பங்கு கொள்பவன்.என் உலகினில் நானும் அவனும் தான் நிஜம்..மற்ற அனைத்தும் கற்பனையே…!!!!
சிறுவயது முதலே…எனக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காத ஒரு காரணமோ…வளர்ந்த காலங்களில் நான் எதிர்பார்த்த அரவணைப்பை… ஒரு கதகதப்பை ஏற்படுத்த முடியாத…தெரியாத…பெண்களையே தேடித்தேடி.... துவண்டு போன ஏமாற்றங்களோ…தான் என்னுள்..இந்த பெண்களை வெறுக்க செய்யும் வலுவான காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.
தாய்மடி கற்பனை..தாய்மடி கனவு..தாயின் அன்பு காணவே முடியாத காணல்..!!!எல்லாம் சேர்ந்து என்னை காலம் என்ற குழியில் போட்டு மூடியது..
முகமுடியுடன் தான் அலைகிறேன்.பசுத்தோள் போர்த்திய புலியாக… சிரித்து பேசி..உள்ளே மரித்து போகும் கடவுள்…தெறித்து சிலிர்க்கும் மிருகம்.. இருந்தும் இயலாத…வெளிப்படுத்த தெரியாத ஒரு கண்ணிவெடி என் வாழ்க்கையில் சிக்கி சின்னாபின்னமாகி போவது அறியாமல்..   புத்தம் புது ஒற்றை ரோஜாவாய் செடியில் பூத்த அவள்…
ரோஜா பூக்களே இல்லாத ஒரு ஊரில் ஒருவன் வீட்டு தோட்டத்தில் …உள்ள ஒற்றைச்செடியில் ஒரு பூ பூத்தால்..எவ்வளவு ஆனந்தம் தோட்டக்காரனுக்கு…சொல்லவே வேண்டாம்…கூத்தாடுவான்.
அதைப்போலத்தான்…இந்த கண்ணிவெடியின் கள்வெறியால் .. காலங்களில்…காதல்களில்…துயரங்களில்..துக்கங்களில்..தூக்கங்களில்…ஏக்கங்களில்…தடம் பதிக்கப்போகும் அந்தஒற்றை ரோஜாப்பூ….!!! நினைத்தாலே சிலிர்க்கிறது…
பூவிற்கு பெயருண்டோ…??? அஞ்சலி…!!!HOD is Calling you….!!! ஒர் குரல்..அப்போதுதான் தெரிந்தது உன் பெயருக்கும் தனி அழகு உண்டு என்று….அஞ்சலி…!!!
திடுக்கென்று எழுந்தாள் அவள்.தும்பைப்பூ சுடிதார்..நிறத்தைப்போலவே அழகும்.என்னை எரிக்கின்ற அழகு…என் மிருகத்தை குலைக்கின்ற அழகு.என் தனிமை வெறிகளை தகர்கின்ற அழகு,தாண்டவமாடும் அழகு.வகுப்பறையை விட்டு வெளியே வேகமாய் வந்தாள்.
சும்மாவே தாங்க முடியாது..இதுல.. என் ஆளு தனியா வேகமா போகுதே..முடியுமா?? காற்றாய் பின்தொடர்ந்தேன்..ஒற்றை ரோஜா செடியை பத்திரமாய் காக்கும் காவல்காரனாய்,அவள் அழகை ரசித்தபடி..சிரித்தபடி..!!!
யாராவது என்னை பார்த்தால் பைத்தியக்காரன் என்றே சொல்லக்கூடும்.பரவாயில்லை..உனக்காகத்தானே……..!!!!!!!!!
என்ன அவள் எங்கே??கனவில் இருந்த நான்..நனவை விட்டு விட்டேன்..
ஹய்யோ.. staff room… உள்ளே போயிருப்பாளோ.. நான் உள்ளே போகலாமா? என்ன செய்வது..?..முழித்துகொண்டே கதவை திறக்க எத்தனிக்கிறேன்..திறந்ததும் எதிரினில் அவள்.. சற்றும் எதிர்பார்த்ததில்லை.. இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் உன்னை காண்பேன் என்று…
பிரமை பித்து என்பார்கள்.கேள்விபட்டு இருக்கிறேன்.இப்போது தான் உணர்கிறேன்.என்னை என் கண்களுக்குள் அழகாய் அவள் பார்க்கின்ற நொடிகள்..ஆயிரம் ஆயிரம் கவிதைகள்…!!!வர்ணிக்க முடியாதது,விவரிக்க முடியாதது…கடவுள் போல்…!!!
அந்த குறுகுறு கண்கள்..ஒரு நொடி தான்..கண்டு கொண்டாள்..நான் வளர்க்கும் காதலை…தெரிந்து விட்டது அவளுக்கு… புரிந்து விட்டது எனக்கும்,, வியர்த்து கொட்டியது..படபடத்தது காற்று..மரம்…செடி கொடி.. உயிரற்றது எல்லாம் உயிருடன் உலவுவது போலவும்…
உயிருள்ள எல்லாம் பொம்மைகளாகி உறைந்தது போலவும்… ப்ப்ப்பா…!!!!
அந்த கண்கள்..என்னை முற்றிலும் அடிமையாக்குகிறதே….!!!!
சாசனம் இன்றி…சத்தம் இன்றி..சங்கடம் இன்றி…இதோ இந்த பெண்ணின் கண்கள் ..என்னை மேலும் அழகாக்குகிறதே…!!!

சிரித்துவிட்டு சென்று விட்டாள்.. தொலைத்து விட்டு அதே இடத்திலேயே சிலையாக நின்று கொண்டிருந்தேன் நான்!!!!!

No comments: