
நூலிழை இடைவெளியில்
சந்தடியே இல்லாமல் எனக்குள் மட்டும்
எங்கே எப்படி நுழைந்தது
இந்த பாழாய் போன மௌனம்...!!!!
தெரிந்து கொள்ள விடை தேடிக்கொண்டிருக்கிறேன்
நீ
என்னை பெண் பார்க்க வருகிறாய்
என்று சொல்லிய அந்த பொழுதோ?
எல்லோரும் அமர்ந்திருக்க
என் அக்கா அழைத்து வந்த நொடி
நீ
சிரித்த கள்ளமில்லா வெள்ளை மனமாய்
விரிந்த அந்த பொழுதோ?
நாம் இருவரும் நம்முடன் பலரும் கூடி
அளவுடன் பேசிக்கொண்ட கோவில் வளாகத்தில்
சற்று இளைப்பாற அமர்ந்து உடன் எழுந்து கொண்ட
அந்த பொழுதிலா??
இன்னும் நிறைய பொழுதுகள்
நினைவில் நீந்திய வண்ணம் தான் இருக்கிறது...!!!
வந்ததை அனுபவிக்க மனம் இன்றி
எப்படி வந்திருக்கும் என ஆராய்வதிலேயே
நிகழ்கின்ற கணங்கள் நீண்டு கொண்டேயிருக்கிறது....!!!

4 comments:
akka.....(please accept),
actually enaku kavithai pidikum
but ivlo pidikumnu therinjikittathu......unga kavithaigali purinjikittuthan..
...................................
krizhh@gmail.com
...................................
im doing final year BE in coimbatore
if i came to chennai, i love to met u....
vaa krish... kandippa meet pannalaam..!!!!
take care...!!!
Such a Cute Kavidhai!
ARUMAYILUM ARUMAI :)
http://krizhhh.blogspot.com
this s my blog...i did little scriblings from my heart. If possible u visit and leave yo valuable comments...
Post a Comment