Friday, December 26, 2008

அப்பா..!!!

குழ‌ந்தை ப‌ருவ‌த்தில் கூடிவிளையாடும்
சிறுவர்க‌ள் சொல்லும் பேய்க்க‌தைக‌ள் கேட்டு..
விடியாத‌ இர‌வுக‌ள் எப்போது போகும் என‌ அழுது
விடிந்த‌ உட‌ன் _ கொல்லைக்கு செல்ல‌
துணைக்கு நீ வ‌ர‌வேண்டும்...!!! வ‌ருவாயே அப்பா..!!!

ப‌ள்ளி நாட்க‌ளில் யாரேனும் என்னை அடித்தாலோ
இல்லை நான் யாரையாவ‌து அடித்தாலோ
அந்த‌ இட‌த்தில் என‌க்காக‌ ஆஜானுபாகுவாய்
நீ வேண்டும்...!!! வ‌ருவாயே அப்பா...!!!

வ‌குப்பின் இடைவேளைக‌ளில் வாச‌லில்
விற்கும் துண்டு மாங்காய்,அவித்த‌ நெல்லிக்காய்
சிவ‌ந்த‌ ம‌ண் ச‌வ்வு மிட்டாய் வெள்ள‌ரிக்காய் _ வாங்கி
நானும் என் தோழிக‌ளும் கூட்ட‌மாக‌ ம‌கிழ்ந்து
சிரித்து பேசி சாப்பிட‌ _ காசு த‌ருவ‌த‌ற்கு
நீ வேண்டும்...!!! த‌ருவாயே அப்பா...!!!

வ‌ருட‌ முடிவில் விடுமுறை நாட்க‌ளில்
தேர்வு முடிவுக‌ளை தெரிந்து கொள்ள‌
"திக்திக்" துடிப்புக‌ளுட‌ன் ப‌ய‌ந்து கொண்டே
ப‌ள்ளிக்குசெல்லும் பொழுதுக‌ளில் _ என‌க்காக‌
என்முன் வ‌ந்து அறிவிக்க‌ நீ வேண்டும் என்று
நினைத்த‌ வேளைக‌ளில் நிஜ‌மாக‌வே வ‌ருவாயே ... அப்பா..!!!

க‌ல்லூரிக்கு போகிறாய்_கையில்
காசு நிறைய இருக்கட்டும்
என்று நான் எதிர்பாராத தருணங்களில்
என்னை திகைப்பில் ஆழ்த்த‌
நீ வேண்டும் _ செய்தாயே அப்பா...!!!

நான் கைவீசி சாலைக‌ளில்
ந‌ட‌ந்த‌தை விட‌
உன் கைப்பிடித்தே நட‌ந்த‌து அதிக‌ம்...!!!
இப்ப‌டி
நீ என‌க்கு கொடுத்த‌ பாச‌ங்க‌ளையும்
நீ உரைத்த‌ ச‌ந்தோஷ‌ங்க‌ளையும்
உன‌க்கு பிடித்த‌ க‌ல்வியையும் கொண்டு
உல‌கை ஜெயிப்பேன் _ உன் கால‌டியில் வைக்க‌ என்று
உன்னை பிரிந்த‌ நாள் முத‌லாய்...

நீயே என் அறிவாக‌வும்
நீயே என் ஆற்ற‌லாக‌வும்
நீயே என் குருவாக‌வும் _ கொண்டு
இன்று நீ நினைத்த‌ எண்ண‌ங்க‌ளையெல்லாம்
செய‌லாக்கி உன்னை தேடி வ‌ருகிறேனே ...அப்பா...!!!
எங்கே போனாய் நீ????

"இற‌ப்பு என்ப‌து இழ‌ப்பு அல்ல‌..!!!
நீ கொண்ட‌ ம‌ன‌த்தினால் _ நித்த‌ம்
ஒருவ‌ரை அன்பினால் பாராட்டும்
ம‌னித‌ருக்கு இற‌ப்பு என்ப‌து இல்லை...
அத‌னால்
இழ‌ப்பு என்ப‌தும் இல்லை" _ இது
நீ என‌க்கு சொன்ன‌ மேற்க்கோள்...!!!

ஆனாலும் இதில் உன்னை வைத்து
பார்க்க‌ ஏனோ ம‌ன‌ம் சிக்கி..
சிதறி சிதைந்து போகிற‌து...!!!
எங்கு ம‌றைந்து போனாய்...?
ஏன் இற‌ந்து போனாய்...???

உன் பிம்ப‌மாய் நான் ம‌ட்டும்
அலைகிறேன் _ உன் ம‌க‌ளாய்...!!!!

Wednesday, December 24, 2008

க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!


கண்களை மூடி கனவினை தேடும்
முகங்களுக்கிடையே
என் மனதினை திற‌ந்து யுக‌ங்க‌ளை
காண‌ விழையும் இந்த‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
யார் வேண்டுமானாலும் வ‌ர‌லாம்
எது வேண்டுமானாலும் வ‌ர‌லாம்..
விதி வில‌க்குக‌ள் இல்லை
ம‌ன‌க்குதிரை ஓடும் வ‌ரை ஆட்ட‌ம்..!!!
எல்லைக‌ளுக்கு அப்பாற்ப்ப‌ட்ட‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
நான் யாரோவாக‌...யாரோ நானாக‌
மாற்றி போடும் கால‌ங்க‌ள்..மீண்டும் _ அந்த‌
யாரோ இன்னொருவ‌ராக‌.. அவர்க‌ளின்
எல்லைக்குள் நானாகி திளைக்கின்ற‌ கண்ணாமூச்சி
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
சில‌ க‌ன‌வுக‌ள் திரைக‌ளில் இருந்து க‌ள‌வாட‌ப்ப‌ட்டு
நான் க‌ண்ட‌ சில‌வ‌ற்றைக‌ள் திரைக‌ளுக்குள்ளே
க‌ள‌வாய் போய் பிற‌கு காணாம‌லே க‌லைகின்ற‌
க‌ன‌வுக‌ள் விற்ப‌னைக்கு...!!!
இதை ப‌டிக்கும் இந்த‌ நொடி உங்களுக்குள்
உதிக்கும் ஏதோ அர்த்த‌ம‌ற்ற‌ க‌ன‌வுக‌ளும்
ஆர்ப்ப‌ரிக்கும் நினைவுக‌ளும் விற்ப‌னைக்கே உரித்தாகுகிற‌து!!!
எடுத்து கொண்டாடும் உரிமையாள‌ர்
உங்க‌ளில் யாரோ ஒருவ‌ராய் இருக்கலாம்...
இல்லை ஏதும் இல்லாத‌தாய் இருக்க‌லாம்...!!!

Friday, December 12, 2008

மிருக‌ம் நான்...க‌ட‌வுள் நீங்க‌ள்..!!!


எரிகின்ற கொள்ளியில்

கரைகின்ற எண்ணை போல்

சூழ்நிலைக‌ள் என்னுள் எரிந்து

த‌ரையில் உதிரும் சாம்ப‌லாய்

த‌க‌ர்ந்து கொண்டிருக்கிற‌து_என் த‌னிமை!!!

நான் நானும் அல்ல‌... வேறு யாரும் அல்ல‌

நிர்வாண‌மே இங்கு நிர‌ந்த‌ர‌ம்

புரிய‌வில்லை _ அரிதார‌ங்க‌ள்

பூசும் ம‌ன‌ங்க‌ளுக்கு

க‌லைந்த‌ வேஷ‌ங்க‌ளும்

க‌லைந்த‌ பின் அடுத்து ந‌ட‌க்கும் ஒப்ப‌னைக‌ளும்

க‌ண‌ப்பொழுதில் க‌ண்முன்னே

நிக‌ழ்ந்து கொண்டுதான் இருக்கிற‌து...!!!

இவைய‌னைத்தையும் வீறுகொண்டு

விள‌க்க‌மாயுரைக்க‌ _ இய‌ம்ப‌வில்லை

என் நாக்கு..!!!

போனால் போக‌ட்டும்

ம‌ன‌ங்கெட்ட‌ மானுட‌ர்க‌ள்..!!

பாழாய் போன‌ ச‌ட‌ங்குக‌ளும்

ப‌ழ‌கி புளித்த‌ சாஸ்திர‌ங்க‌ளும் _ அணிந்து கொள்ள‌

என்ன தான் ஆசையோ இவ‌ர்க‌ளுக்கு

எடுத்து சொன்னால்

மிருக‌ம் நான்...க‌ட‌வுள் நீங்க‌ள்..!!!

ச‌த்த‌ங்க‌ள் சூழ்ந்து ச‌ச்ச‌ர‌வுக‌ள் மிகுந்து

வெறும் பிண்ட‌ங்க‌ள் ஆளும் நாட்டு வாழ்க்கையின்

க‌ட‌வுளாய் இருப்ப‌தை விட‌_இருள் ம‌ட்டுமே புர‌ளும்

காட்டு வாழ்க்கையில் ஒரு

மிருக‌மாய் அலைவ‌தே மேல்....!!!!!

நான்...!!!!

காண்போரை கவர்ந்திழுக்க‌
வ‌ழிந்தோடும் வெண்மை தான்
நில‌வுக்கு அழ‌கு என்றாலும் _கண்டவுடன்
தெறித்து ஓடி அதனுள் ப‌ட‌ர்ந்திருக்கும்
சிறு கருமை போல‌ எங்கும் எப்போதும்
த‌னித்து இருக்க‌வே விரும்புகிறேன்
நான்...!!!!

எங்கே அந்த‌ சுத‌ந்திர‌ தின‌ம் ???!!!!

பிறந்த‌வுட‌ன் பொட்டையா?
அதுவும் ரெட்டையா என்று கேட்டு
ப‌க்க‌த்துவீட்டு பாட்டி ஆர‌ம்பித்து வைத்த‌
என் பிற‌ந்த‌ தின‌ம்...!!!!

"பொற‌ந்த‌வுடனேயே
பெத்த‌வ‌ளை முழுங்கிடுச்சு
இன்னும் யாரை முழுங்க‌ போகுதோ"
என்று எதிர்தாத்து மாமி ப‌ய‌ந்து
நான் வ‌ளர்ந்த‌ தின‌ங்க‌ள்...!!!

வெண்ணை வைக்கா விட்டாலும்
சுண்ணாம்பு வைக்க‌ த‌வ‌றாத‌
சித்தியின் கொடுமை தின‌ங்க‌ள்...!!!

"உன் நன்மைக்காக நினைத்து
இப்படி பண்ணிடேனம்மா" என்ற
அப்பாவின் புல‌ம்ப‌ல் தின‌ங்க‌ள்..!!!

பெரிய‌வ‌ளாயிட்ட‌ இனி எத‌ற்கு ப‌டிப்பு
பேசாம‌ வீட்டை பார்த்துக்கோ
என்று குழ‌ந்தைக‌ளுக்கு ஆயாவாகிய‌
என் இள‌மை மிகுந்த‌
கொடுமையான‌ தின‌ங்க‌ள்...!!!

சாலையில் ந‌ட‌க்கும் போது
சிறுவ‌ன் முத‌ல் கிழ‌வ‌ன் வ‌ரை
க‌ழுகு பார்வை பார்த்து
என்னுள் குறுகி சுருங்க‌வைத்த‌
ந‌த்தைகூட்டு தின‌ங்க‌ள்...!!!

நான் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் மேல் ஆசைப்பட்டவனுக்கும் இல்லாமல்
என் வாழ்க்கை இந்த‌ பாழாய் போன‌
க‌ல்யாண‌ ச‌ந்தையில் விற்க‌ப்ப‌ட்ட‌ தின‌ங்க‌ள்..!!!

திரும‌ண‌த்திற்கு பிற‌கு ஒவ்வொரு நாளும்
என் ச‌ம்ம‌த‌மின்றி
நான் க‌லைக்க‌ப்ப‌ட்ட‌ கருப்பு தின‌ங்க‌ள்..!!!

பெண்தான் வேண்டும் என்று த‌வ‌மிருக்கையில்
இர‌ட்டை ஆண் குழ‌ந்தைக‌ளுக்கு தாயான‌
அவ‌ல‌ தின‌ங்க‌ள்..!!!

க‌ண‌வ‌னை இழ‌ந்த‌ பின்ன‌ர்,
குழ‌ந்தைக‌ளுக்காக‌வே வாழ்ந்து
ஓடாய் தேய்ந்து வீழ்ந்த‌ தின‌ங்க‌ள்..!!!

முதுமையின் வெம்மையில்
பிள்ளைக‌ளின் நிழ‌லில் வாழ‌ நினைக்கையில்
முதியோர் இல்ல‌மே என் இட‌ம் என‌
அவ‌ர்க‌ள் தீர்மானித்த அவமான‌ தின‌ங்க‌ள்..!!!

த‌னிமையை தேடி..ஓடி..நாடி..
க‌ளைத்து உயிர்விட்ட‌
என் வாழ்வின் இற‌ந்த‌ தின‌ங்க‌ள்..!!!
ஆமாம்............
இவ‌ற்றில் எங்கே வ‌ருகிற‌து
என்னுடைய‌
"அந்த‌ சுத‌ந்திர‌ தின‌ம்?!!!!"