Tuesday, March 4, 2008

காதல்..

பார்த்து
பழகி
பேசிய பின்னும் - என்னுள்
மறைத்து வைக்கவே
தோன்றுகிறது
உன் மீது கொண்ட காதலை...!!

உன்னை காண்பதற்கு முன்..

கடவுளிடம் எதுவும்கேட்டதில்லை நான்...!!
மாறாக ஒவ்வொரு முறையும்
உனக்கு என்னிடம் _ என்ன வேண்டும்
இறைவா என நினைத்திருக்கிறேன்
உன்னை காண்பதற்கு முன்பு...!!!

நீ மட்டும்

மழையும் நீயும் ஒன்று தான்!!
எங்கேயும் பேதம் - பார்ப்பதில்லை
பரவலாகவே பொழிகிறது!
நீயும் அப்படித்தான் உன்னை
நினைத்தால் ‍_ யாரும்
எனக்கு தெரிவதில்லை...
நீ மட்டும் தான்...!!!