Thursday, February 21, 2008

நாகரீகம்

படர்ந்து செல்லும் இருட்டில்
பாய்ந்து ஓடும் ‍_ வெளிச்சங்கள் படர‌
அரவமற்ற சாலையில் வாகனங்களை தவிர‌
வேறெதுவும் காணமுடியவில்லை!

வீட்டிற்கு செல்லும் பாதையில்
ஒரு மயான காடும் இருக்கின்றது
காற்றை படித்தவாறு _ கண்ணிமைக்கும்
நேரங்களில் அதை கடக்கும் வேளைகளில்
நானும் நினைத்திருக்கிறேன் _ ஒருநாள்
என் இடம் இதுவாக கூடும் என்று!

தூரத்தில் ஒலிக்கும் தேவாலய மணியோசை
என்னை யோசிக்க வைதிருக்கிறது _ ஒருவேளை
எல்லோரும் கடவுள் தானோ ..!

அட‌ர்ந்த‌ காட்டின் மேல்
உறைந்த‌ க‌ருமையில் _ ப‌ர‌வும்
வெயில் போல‌...
இந்த‌ நாக‌ரீக‌ வாழ்கை
என் நிஜ‌ங்க‌ளை க‌ளைந்து
நிழ‌ல்க‌ளை ம‌ட்டுமே உல‌வ‌ விட்டிருக்கிற‌து!

போலி புன்ன‌கைக‌ள்
புற‌ங்கூறுத‌ல்...
ம‌றைமுக‌ தாக்குத‌ல்க‌ளில் _ மிருக‌ங்க‌ளே
ந‌ம்மை க‌ண்டு மிர‌ளும் நிலை இந்த நாகரீகம்...!

யாருக்கு வேண்டும்?
எத‌ற்கு வேண்டும்?
ஏன் வேண்டும்?

உண‌ர்வுக‌ள் விழித்து கொள்ள‌
சிற‌குக‌ள் முளைத்து பறந்து போகின்றேன்_ மீண்டும்
ந‌ம் க‌ற்கால‌ வாழ்கைக்கே...!!!